தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றும் திட்டம்: TRCSL



இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) சமீபத்தில் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை அறிவித்துள்ளது. பயனாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் தொலைத்தொடர்பு வழங்குநரை மாற்றும் திட்டம் பற்றிய வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது வெளிநாடுகளில் பல வருடங்களுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவை ஆகும். எனினும் இலங்கையை பொறுத்தமட்டில் TRCSL'ன் இந்த திட்டம் இலங்கை தொலைத்தொடர்பு வளர்ச்சியில் சிறந்த ஒரு ஆரம்பமாக பார்க்கப்படுகின்றது. இது பற்றி ட்விட்டர் தளத்தில் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளது.


மேலும் Mobile இலக்கம் மற்றும் நிலையான இணைப்பு  இரண்டிற்கும் இந்த திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகும் அறிவித்துள்ளது. மிகவிரைவில் இது பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய  செய்திகள் வெளிவரலாம்.

இந்த செய்தி இனை அடுத்து, இந்த திட்டத்துக்கு Dialog மற்றும் SLT/Mobitel  போன்ற சேவை வழங்குநர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை